சென்னை உள்பட 9 இடங்களில் அதிரடி சோதனை தேசிய புலனாய்வு குழு நடவடிக்கை

by Editor / 09-06-2022 04:35:42pm
சென்னை உள்பட 9 இடங்களில் அதிரடி சோதனை தேசிய புலனாய்வு குழு நடவடிக்கை

தமிழகத்தில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பி னருடன் தொடர்பில் உள்ளவர்கள் பற்றிய விவரங்களை சேகரித்து தேசிய புலனாய்வு முகமை என்று அழைக்கப்படும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவ்வப்போது சோதனை நடத்தி வருகிறார்கள்.


 மயிலாடு துறையில் கடந்த பிப்ரவரி மாதம் ஐ.எஸ். ஆதரவாளர்கள் என்று சந்தேகிக்கப்படும்  சாதிக்பாஷா, இலந்தனகுடியைச் சேர்ந்த ஜஹபர் அலி, கூட்டாளிகளான கோவை முகமது ஆஷிக், காரைக்கால் முகமது இர்பான், சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த ரஹ்மத் ஆகிய 5 பேரையும் கைது செய்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் 4 மாதங்களுக்கு பிறகு என்.ஐ.ஏ. அதிகாரிகள் இந்த வழக்கு தொடர்பாக இன்று 9 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னை, மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய 3 ஊர்களிலும் இந்த சோதனை நடைபெறுகிறது.

மண்ணடியில் 2 இடங்களிலும், அண்ணா சாலையில் ஒரு இடத்திலும் சோதனை நடை பெற்றுள்ளது. மயிலாடு துறை நீடூரை சேர்ந்த சாதிக்பாஷா, சென்னை வந்து தங்கி இருந்துள்ளார். இதன் அடிப்படையிலேயே என்.ஐ.ஏ. அதிகாரிகள் 3 இடங்களிலும் சோதனை மேற்கொண்டுள்ளனர். சென்னையில் தங்கி இருந்த போது  சாதிக்பாஷா யார்-யாருடன் தொடர்பில் இருந்தார் என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


மயிலாடுதுறையில் பிடிபட்ட 5 பேரிடமும் அப்போது நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டனர். அப்போது கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையிலேயே இன்றைய சோதனை நடைபெற்றுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நீடூர், எலந்தங்குடி, அரிவேலூர், கிளியனூர், உத்திரங்குடி ஆகிய 5 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.இதற்காக சென்னையில் இருந்து மயிலாடுதுறைக்கு இன்று காலை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஜித் தலை மையில் என்.ஐ.ஏ. அதிகாரி கள் 25 பேர் கார்களில் வந்தனர். பின்னர் அவர்கள் 5 பேர் கொண்ட குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

நீடூரில் உள்ள சாதிக் பாட்ஷா வீட்டில் புகுந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் வீட்டின் கதவை பூட்டி னர். பின்னர் அங்கு இருந்த சாதிக்பாட்ஷா உறவினர்களிடம் விசாரணை நடத்தினர்.இதேப்போல் உத்திரங்கு டியில் ஜெகபர் சாதிக் என்பவரது வீட்டில் சோதனை நடைபெற்றது. சில ஆவணங்களை காட்டி விளக்கம் கேட்டனர்.மேலும் மற்ற 3 இடங்களிலும் தீவிரமாக சோதனை நடந்து வருகிறது. இதில் சில முக்கிய ஆவணங்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.சோதனை நடைபெற்ற அனைத்து இடங்களிலும் உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Tags : Action check by National Investigation Commission in 9 places including Chennai

Share via