நள்ளிரவில் பயணிகளிடம் கத்தியை காட்டி மிரட்டியா மூன்று நபர்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்

by Staff / 09-06-2022 04:35:26pm
நள்ளிரவில் பயணிகளிடம் கத்தியை காட்டி மிரட்டியா  மூன்று நபர்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் பயணிகளிடம் கத்தியை காட்டி மிரட்டியவர்களை  பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகளிடம் 3 பேர் மது போதையில் கத்தியை காட்டி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அவர்களை சுற்றி வளைத்து பிடித்த பொதுமக்கள் கத்தியைப் பிடுங்கி அதில் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் சிலர் மூன்று நபர்களையும் தாக்கிய  நிலையில் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 3 பேரையும் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

 

Tags :

Share via