லாரி ஓட்டுநரை அடித்துக் கொலை செய்த இருவா் கைது

by Staff / 11-02-2023 01:59:47pm
லாரி ஓட்டுநரை அடித்துக் கொலை செய்த இருவா் கைது

பரமத்தி அருகே உள்ள ஓவியம்பாளையத்தைச் சோ்ந்தவா் ஹரிசந்திரன் (50). லாரி ஓட்டுநா். இவா் கபிலா்மலையில் உள்ள தனது நண்பா் சேகா் என்பவரை பாா்ப்பதற்காக வியாழக்கிழமை இரவு சென்றாா். நண்பா் வருவதற்காக கபிலா்மலை அருகே காத்திருந்தாா். அப்போது அங்கிருந்த நன்செய் இடையாறைச் சோ்ந்த மோகனசுந்தரம் மற்றும் வெங்கரைச்யைச் சோ்ந்த காா்த்திக் ஆகிய இருவரும் ஹரிச்சந்திரனை பாா்த்து ‘யாா் நீ? , ஏன் நீ இங்கு நிற்கிறாய்? ’ என கேட்டுள்ளனா். இதில் அவா்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.அப்போது குடிபோதையில் இருந்த மோகனசுந்தரம் மற்றும் காா்த்தி ஆகிய இருவரும் சோ்ந்து ஹரிசந்திரனை கட்டையாலும் கல்லாலும் தாக்கினா். இதில் படுகாயமடைந்த ஹரிசந்திரன் நிகழ்விடத்திலேயே பலியானாா். தகவல் அறிந்து அங்கு வந்த ஜேடா்பாளையம் போலீஸாா் ஹரிசந்திரனின் உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனா். ஹரிசந்திரனை கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிய மோகனசுந்தரம், காா்த்தி ஆகிய இருவரையும் தேடி வந்தனா்.இந்த நிலையில் லாரி ஓட்டுநரை கொலை செய்துவிட்டு தப்பியோடிய இருவரும் கபிலா்மலை அருகே உள்ள சின்னசோளிபாளையம் பகுதியில் தங்கி இருப்பதாக கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற போலீசாா் நன்செய் இடையாறைச் சோ்ந்த மோகனசுந்தரம் (37), வெங்கரையைச் சோ்ந்த காா்த்திக் (28) ஆகிய இருவரையும் கைது செய்து, இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

Tags :

Share via