மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் பலி
சமீபத்தில் குஜராத் மாநிலம் சூரத்தில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. திண்டோலி பகுதியில் உள்ள உமியாநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பார்தி பென் படேல் என்ற பெண் வசித்து வந்தார். இவர் மூன்றாவது மாடியில் உள்ள பால்கனியை சுத்தம் செய்துகொண்டிருந்த போது தவறி கீழே விழுந்தார். உயரத்தில் இருந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Tags :