மனைவியை இரக்கமின்றி அடித்த கணவன்

by Staff / 16-02-2023 12:31:16pm
மனைவியை இரக்கமின்றி அடித்த கணவன்

உத்தரப்பிரதேசத்தின் அலிகார் பகுதியில் இந்த கொடூரம் நடந்துள்ளது. ரோராவர் காவல் நிலையத்தின் மாமுத் நகர் பகுதியில் பெண் ஒருவரை அவரது கணவர் கொடூரமாக தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. மனைவியை கீழே தள்ளி அடித்து உதைத்து சித்ரவதை செய்துள்ளார். மேலும், மனைவியின் தாயையும் கண்மூடித்தனமாக அடித்துள்ளார். தாய் வீட்டில் இருந்து பணம் கொண்டு வர மறுத்த மனைவியை அவர் அடித்ததாக கூறப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குற்றவாளி கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

Tags :

Share via