சாலை விபத்தில் இளம்பெண் பலி

by Staff / 25-02-2023 05:15:47pm
சாலை விபத்தில் இளம்பெண் பலி

நாமக்கல் எஸ். கே. நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி சாந்தி. இவர்கள் கடந்த 21-ந் தேதி, அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். பின்னால் அமர்ந்திருந்த சாந்தி, அப்போது ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் நாமக்கல்லில் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

 

Tags :

Share via