காட்டாற்று வெள்ளத்தில் 250 ஆடு தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

by Admin / 31-10-2023 09:50:45am
 காட்டாற்று வெள்ளத்தில் 250 ஆடு தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

கோவில்பட்டி அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 250 ஆடுகள் மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் மீட்டனர்

 

விளாத்திகுளம் உள்ள வடமலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவர் நூற்றுக்கணக்கான ஆடுகளை வைத்து ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார்..

இந்நிலையில் நேற்று காலை சக்திவேல் விளாத்திகுளம் அருகே உள்ள மாவிலோடை கிராமத்தில் அமைந்துள்ள பெரிய கண்மாய் பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது, அதிகமான மழை பெய்ததால், திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் சூழ்ந்ததில் சக்திவேல் தனது 250 ஆடுகளுடன் இரவு முழுவதும் கண்மாயிலேயே தவித்து வந்துள்ளார்.

 அதனைத்தொடர்ந்து அங்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் கிராம மக்கள், வெளிவர முடியாமல் தண்ணீரில் தவித்துக் கொண்டிருந்த 250 ஆடுகளை மீட்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு மீட்டனர்.

 காட்டாற்று வெள்ளத்தில் 250 ஆடு தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
 

Tags :

Share via