சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறப்பு

by Editor / 06-09-2022 12:51:00pm
சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறப்பு

சபரிமலை அய்யப்பன் கோவிலில் தங்க மேற்கூரையில் மழை நீர் கசிவு ஏற்பட்ட பகுதியில் தங்க தகடுகள் பதிக்கும் பராமரிப்பு பணி முடிவடைந்தது. இந்நிலையில் ஓணம் பண்டிகைக்காக கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடை திறக்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி திறந்து வைக்கிறார். 10ம் தேதி வரை கோவிலில் பூஜைகள் வழக்கம்போல் நடைபெறும். மாத பூஜை காலங்களை போலவே, நெய்அபிஷேகம், கலச பூஜை, களபபூஜை, சகஸ்ரகலச பூஜை, படிபூஜை உள்பட அனைத்து பூஜைகளும் நடைபெறும். சாமி தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில் நாளை முதல் 10ம்தேதி வரை நிலக்கல்லில் உடனடி தரிசன முன்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via