உயிரிழந்த கணவரை நினைத்து பெண் தற்கொலை,

by Staff / 28-02-2023 03:34:03pm
உயிரிழந்த கணவரை நினைத்து பெண் தற்கொலை,

கோவை சரவணம்பட்டி முதல் காளபட்டி சாலையை சேர்ந்தவர், 65 வயதான தம்பு, இவரது உறவினர் மகள் 43 வயதான அமுதா, இவரது கணவர் 2017 ஆம் ஆண்டு, இறந்தவரின் கணவர் உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது, கணவர் இறந்த நாளில் இருந்து, மன விரக்தியில் இருந்து வந்துள்ளார், இதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார், இந்த நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன், அமுதா தற்கொலைக்கு முயன்றுள்ளார், உடனடியாக இவரது உறவினர்கள் அவரை மருத்துவமனை கொண்டு சென்று அவரை காப்பாற்றி உள்ளனர், இந்நிலையில், நேற்று மீண்டும் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார், இதனை தொடர்ந்து இது குறித்து சரவணம்பட்டி காவல் நிலையத்தில் தம்பு நேற்று புகார் அளித்தார் புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via