ஆளுநர் பங்கேற்ற இந்தி விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்து அவமதிப்பு

by Staff / 18-10-2024 05:15:15pm
ஆளுநர் பங்கேற்ற இந்தி விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்து அவமதிப்பு

சென்னை டிடி தமிழ் டிவியில் நடைபெற்று வரும் இந்தி மாத கொண்டாட்ட விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளார். விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வரியை தவிர்த்து விட்டு பாடியதால் சர்ச்சை எழுந்துள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்தை ஆளுநர் இழிவுபடுத்தி இருப்பதாக பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via