காங்கிரஸ் தன்னைத்தானே அழித்துக் கொண்டிருக்கிறது - மூத்த தலைவர் கருத்தால் சர்ச்சை

by Writer / 27-01-2022 11:21:54pm
காங்கிரஸ் தன்னைத்தானே அழித்துக் கொண்டிருக்கிறது - மூத்த தலைவர் கருத்தால் சர்ச்சை

கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் சிஎம் இப்ராகிமும் ஒருவர். இதற்கிடையில், கர்நாடக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராக பிகே ஹரிபிரசாத்தை காங்கிரஸ் அறிவித்தது. 


இதனால், இப்ராகிம் காங்கிரஸ் மீது அதிருப்தியில் உள்ளார். அவர் காங்கிரசில் இருந்து விலகி மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இந்நிலையில், காங்கிரஸ் தன்னைத்தானே அழிந்துக்கொண்டிருக்கிறது என்று இப்ராகிம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், காங்கிரஸ் தன்னைத்தானே அழிந்துக்கொண்டிருக்கிறது. காங்கிரசில் பணம் இல்லாமல் யாரும் வேலை செய்ய முடியாது. இந்திரா காந்தி, நேரு காலத்தில் காங்கிரஸ் சமூகத்திற்கான கட்சியாக இருந்தது. ஆனால், தற்போது அது லீனா வங்கியாக உள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் தோற்கடிக்கப்படும். காங்கிரஸ் மூழ்கிவிட்டது’ என்றார்.

 

Tags :

Share via