விளாத்திகுளம் அருகே கடலில் மூழ்கி 2 பெண்கள் பலி - 3 பேர்கள் மருத்துவமனையில் அனுமதி
விளாத்திகுளம் அருகே உள்ள பெரியசாமிபுரம் கடலில் குளிக்கும் பொழுது 2 பெண்கள் கடல் அலையில் சிக்கி பலியாகியுள்ளனர். மூன்று பேர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை ஜி ஆர் நகரை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் பௌர்ணமியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் அருகே உள்ள பெரியசாமிபுரத்தில் குலதெய்வம் கோயிலுக்கு சாமி கும்பிடுவதற்காக வந்துள்ளனர் குலதெய்வத்தை தரிசனம் செய்துவிட்டு இன்று காலை 6 மணி அளவில் பெரியசாமிபுரம் கடற்கரைக்கு குளிப்பதற்காக 20 சென்றுள்ளனர். இதில் பெரும்பாலும் பெண்களை இருந்துள்ளனர்.
நேற்று பௌர்ணமி என்பதால் இன்றும் கடல் அலை சீற்றம் அதிகமாக இருந்துள்ளது.அந்த நேரத்தில் 20 பேர்களும் குளிப்பதற்காக சென்றுள்ளனர். அதிகமான காற்றுடன் கடல் சீற்றம் அதிகமாக இருந்துள்ளதால் மதுரை ஜி.ஆர். நகரை சேர்ந்த இலக்கியா (21) கன்னியம்மாள் (50) முருக லட்சுமி (38)ஸ்வேதா (22) அனிதா (29) ஆகிய ஐந்து பெண்களும் கடல் அலையில் சிக்கி உள்ளே இழுத்துச் செல்லப்பட்டனர். அப்போது உடன் குளித்துக் கொண்டிருந்தவர்கள் அவர்களை காப்பாற்ற முற்பட்டனர்.
இதில் இலக்கியா, கன்னியம்மாள் ஆகிய இருவரும் அலையில் சிக்கி மூச்சு திணறி உயிரிழந்தனர். அனிதா,சுவேதா, முருகலட்சுமி, ஆகிய 3 பெண்களும் காப்பாற்றப்பட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேம்பார் போலீசார் அவர்களுக்கு வேம்பார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி செய்து மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
பௌர்ணமியை முன்னிட்டு குலதெய்வம் வழிபாடு செய்வதற்காக வந்த பெண்கள் குளிக்கும் பொழுது கடல் சீற்றத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது இது தொடர்பாக வேம்பார் கடலோர காவல் நிலையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :