வாட்ஸ் அப் சேவை முடங்கியது....கோடிக்கணக்கானவர்களின் பொழுது போக்கும் முடக்கியது..

by Editor / 25-10-2022 02:06:40pm
வாட்ஸ் அப் சேவை முடங்கியது....கோடிக்கணக்கானவர்களின் பொழுது போக்கும் முடக்கியது..

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ்-அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். தகவல் பரிமாற்றத்தில் மக்கள் மத்தியில் வாட்ஸ்அப் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. புகைப்படங்கள், வீடியோ, மற்றும் குறுஞ்செய்திகள் என வாட்ஸ்-அப் பயனாளர்கள் நாளுக்கு நாள் பெருகி கொண்டே செல்கின்றனர்.

இந்நிலையில், இன்று மதியம் 1மணியளவில்  வாட்ஸ்-அப் செயலி திடீரென முடங்கியது. கடந்த 45 நிமிடங்களுக்கு மேலாக வாட்ஸ்-அப் பயன்பாட்டில் இல்லை. இதனால் தகவல்களை பரிமாற்றம் செய்யமுடியாமல், வாட்ஸ்-அப் பயனாளர்கள் அவதிக்குள்ளாகிவருகின்றனர். வாட்ஸ்-அப் நிறுவனத்தின் முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் வாட்ஸ்-அப் சேவை முடங்கியதால், பயனாளர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் டெலிகிராம், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலமாக பயனாளர்கள் தகவலை பரிமாறி வருகின்றனர். வாட்ஸ்-அப் சேவை எப்போது சரி செய்யப்படும் என்ற கேள்வி எழுப்பியுள்ளனர். உடனடியாக தொழில் நுட்ப கோளாறை சரி செய்து மீண்டும் வாட்ஸ்-அப் சேவையை தடையின்றி கிடைக்க வாட்ஸ்-அப் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

அதே நேரத்தில் வாட்ஸ்-அப் சேவை முடங்கியதும், நெட்டிசன்கள் டிவிட்டரில் ‘வாட்ஸ்-அப் டவுன்’ என்ற ஹேஸ்டேக்கை பதிவிட்டுள்ளனர். இதை பலரும் பகிர்ந்து வருவால் வாட்ஸ்-அப் சேவை முடக்கத்திற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. வாட்ஸ் அப் சேவை முடங்கியதால் ....கோடிக்கணக்கானவர்களின் பொழுது போக்கையும்  முடக்கியது.
 

 

Tags :

Share via