மாநகராட்சிபெண் கவுன்சிலர்களை மறைந்து இருந்து படம் எடுத்த நபர்.

by Editor / 05-10-2023 08:53:29am
 மாநகராட்சிபெண் கவுன்சிலர்களை மறைந்து இருந்து படம் எடுத்த நபர்.

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகள் தொடர்பாக மனு அளிப்பதற்கு ஆலோசனை நடத்திய போது பெண் கவுன்சிலர்களை மறைந்து இருந்து படம் எடுத்த நபர் மீது நெல்லை மாநகராட்சியிலுள்ள  35 கவுன்சிலர்கள் ஒன்றிணைந்து நெல்லை சந்திப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.மேலும் பெண் கவுன்சிலர்களை படம் எடுத்த நபரின் செல்போனும் காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.தப்பியோடிய  காளீஸ்வரன் என்ற நபர் மீது நடவடிக்கை எடுக்க கவுன்சிலர்கள் புகார்.தப்பி ஓடிய நபர் மேயரின் ஆதரவாளர் எனவும் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
 

 

Tags : நெல்லை மாநகராட்சிபெண் கவுன்சிலர்களை மறைந்து இருந்து படம் எடுத்த நபர்.

Share via