மது அருந்தாததால் மனைவி தீ வைத்து எரிப்பு
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் கணவர் ஒருவர் தனது மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யத்வேந்திரா, வினிதா தம்பதிக்கு கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். யத்வேந்திரன் குடித்துவிட்டு வந்து வினிதாவிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். சமீபத்தில் மனைவியை மதுபானம் குடிக்கச் சொல்லி சண்டையிட்டுள்ளார். ஆத்திரமடைந்த அவர் வினிதா மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார். இதில், பலத்த காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Tags :