திருப்பரங்குன்றத்தில் கண்மாய் பகுதியில் கிடந்த மனித எலும்புகள்

by Staff / 09-03-2023 12:29:41pm
திருப்பரங்குன்றத்தில் கண்மாய் பகுதியில் கிடந்த மனித எலும்புகள்

திருப்பரங்குன்றம் அருகே நிலையூர் கண்மாய் பகுதியில் மனித மண்டை ஓடு மற்றும் எலும்புகள் தனித்தனியாக கிடந்தன. இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆஸ்டின்பட்டி போலீசில் நிலையூர் முதல் பிட் ஊராட்சி கிராம நிர்வாக அதிகாரி கந்தவேல் புகார் செய்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் லட்சுமி லதா, சப்-இன்ஸ்பெக்டர் சாமியப்பன் மற்றும் போலீசார் விரைந்து சென்று கண்மாய்க்குள் கிடந்த எலும்பு துண்டுகளை ஒன்றாக சேர்த்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via