தாய் பால் குடித்த குழந்தை பலி-தாய் தற்கொலை

by Staff / 17-03-2023 11:41:59am
தாய் பால் குடித்த குழந்தை பலி-தாய் தற்கொலை

கேரளாவில் தாயின் பால் தொண்டையில் சிக்கி குழந்தை உயிரிழந்துள்ள சம்பவத்தில், இதனைத் தாங்க முடியாத குழந்தையின் தாய், தனது மற்றொரு மகனுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இடுக்கி மாவட்டம் உப்புதாராவில் லிசா டாம் (38) என்பவருக்கு ஒரு மாதத்திற்கு முன் குழந்தை பிறந்தது. தாய் வழக்கம் போல் குழந்தைக்கு பாலூட்டி வந்துள்ளார். இந்த நிலையில், தாயின் பால் தொண்டையில் சிக்கி குழந்தை இறந்தது. இதனால் மனமுடைந்த லிசா, மகனுடன் (7) கிணற்றில் குதித்து தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.

 

Tags :

Share via