தெற்கு மெக்சிகோவில் சூறாவளி பேரழிவு.. 43 பேர் பலி

by Staff / 30-10-2023 11:11:53am
தெற்கு மெக்சிகோவில் சூறாவளி பேரழிவு.. 43 பேர் பலி

தெற்கு மெக்சிகோவின் குரேரோவில் சூறாவளி தாக்கியதில் 43 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக குரேரோ மாகாண ஆளுநர் எவ்லின் சல்காடோ அறிவித்துள்ளார். உயிரிழந்தவர்களில் 33 ஆண்களும் 10 பெண்களும் அடங்குவர். இந்த விபத்தில் 340 பேர் மீட்கப்பட்டதாக ஆளுநர் தெரிவித்தார். சூறாவளியின் தாக்கத்தால் 2,20,035 வீடுகள் இடிந்ததாகக் கூறப்படுகிறது. சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.

 

Tags :

Share via