கனமழை வெள்ளத்தில் சிக்கி 100 பேர் பலி..
பிரேசிலின் ரியோ கிராண்டே டோ சுல் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 128 பேரை காணவில்லை. தொடர் மழை காரணமாக பல கட்டிடங்கள், பாலங்கள் இடிந்து விழுந்து பல பகுதிகளும் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. இதனால் 1,63,000 பேர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். மேலும் சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். தொடர்ந்து மீட்புப்படைகள் மூலம் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை அந்நாட்டு அரசாங்கம் செய்து வருகின்றது.
Tags :