பிரதமருக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் கடிதம்

by Staff / 30-10-2023 11:15:46am
பிரதமருக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் கடிதம்

கத்தாரில் முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகள் 8 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர்களை மீட்டு அழைத்து வருமாறு முன்னாள் இந்திய ராணுவ வீரர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். இந்த விவகாரத்தில், உடனடியாகத் தலையிட்டு விடுதலை செய்யக் கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, 'இந்திய முன்னாள் ராணுவ இயக்கம் (ஐஇஎஸ்எம்)' என்ற பெயரில் கடிதம் எழுதியுள்ளார்கள். தாய்நாட்டைக் காக்க உயிரை தியாகம் செய்யத் தயங்காத நமது ராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது தங்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via