தென்மேற்கு பருவமழை மே 31ஆம் தேதி கேரளாவில் தொடங்குகிறது!

by Editor / 16-05-2024 10:13:01am
தென்மேற்கு பருவமழை மே 31ஆம் தேதி கேரளாவில் தொடங்குகிறது!

தென்மேற்கு பருவமழை மே 31ஆம் தேதி கேரளாவில் தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு, தென்மேற்கு பருவமழை நான்கு நாட்கள் முன்கூட்டியே மே 31 ஆம் தேதி கேரளாவில் தொடங்கும் என்று நேற்று (மே 15) தெரிவித்தது. தரவுகளின்படி, கேரளாவில் பருவமழை தொடங்கும் தேதி கடந்த 150 ஆண்டுகளில் பரவலாக மாறுபட்டுள்ளது. முதலில் மே 11, 1918ஆம் ஆண்டில் மிக முன்பாகவும், ஜூன் 18, 1972-ல் மிக தாமதமாகவும் பருவமழை தொடங்கியுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் 8ஆம் தேதியும், 2022ஆம் ஆண்டு மே 29ஆம் தேதியும், 2021ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் தேதியும், 2020ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதியும் தென்மேற்கு பருவமழை தொடங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

 

Tags : தென்மேற்கு பருவமழை மே 31ஆம் தேதி கேரளாவில் தொடங்குகிறது!

Share via

More stories