மனைவி கடிதம் எழுதி வைத்து தற்கொலை

by Staff / 04-07-2023 02:13:47pm
மனைவி கடிதம் எழுதி வைத்து தற்கொலை கணவரின் கள்ளக்காதல் விவகாரத்தில் மனமுடைந்த மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூரு ஹெக்கனஹள்ளி பகுதியில் நடந்துள்ளது. ஜூலை 3 ஆம் தேதி தற்கொலை செய்து கொள்வதற்கு முன், பவித்ரா மரணக் கடிதம் ஒன்று எழுதி வாட்ஸ்அப்பில் பகிர்ந்துள்ளார். அதில், அவர் கணவர் சேத்தன் கவுடாவுக்கும், மற்றொரு இளம் பெண்ணுக்கும் இடையே உள்ள தகாத உறவை, கணவர் கூறியதாக கூறப்படுகிறது. பவித்ரா சேத்தன் கவுடாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இதனை தொடர்ந்து பவித்ரா மரணம் குறித்து கெங்கேரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Tags :

Share via