ரகளை செய்த 2 அமெரிக்க இளைஞர்கள் கைது

by Staff / 26-11-2023 02:08:53pm
ரகளை செய்த 2 அமெரிக்க இளைஞர்கள் கைது

சென்னை நுங்கம்பாக்கம் பிரபல நட்சத்திர ஓட்டலில் 2 அமெரிக்க இளைஞர்கள், குடித்துவிட்டு பாரில் இருந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, ஓட்டல் பாதுகாவலர்கள் 2 இளைஞர்களையும், ஆட்டோவில் ஏற்றி, அவர்கள் தங்கியிருக்கும் இடத்துக்கு அனுப்பி வைத்தனர்.ஜெமினி மேம்பாலம் சிக்னல் அருகே வந்த போது ,ஆட்டோவில் இருந்து குதித்து சாலையில் சென்ற பொதுமக்கள், வாகன ஓட்டிகளை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த பொதுமக்கள், அந்த இளைஞரை திருப்பி தாக்கி, போலீசில் புகார் அளித்தனர். பின்னர் போலீஸ் வந்து இருவரையும் கைது செய்தனர்.பின்ன்னர் போலீஸார் நடத்திய விசாரணையில், இருவரும் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த அலெக்ஸ், மெல்கார் என்பது தெரியவந்தது.
 

 

Tags :

Share via