வேட்டையன்படத்தில் :கோவில்பட்டி அரசுப்பள்ளி தொடர்பான காட்சிக்கு எதிர்ப்பு - இயக்குநர் ஞானவேல் மீது போலீசில் புகார்!

by Editor / 11-10-2024 10:11:14am
வேட்டையன்படத்தில் :கோவில்பட்டி அரசுப்பள்ளி தொடர்பான காட்சிக்கு எதிர்ப்பு - இயக்குநர் ஞானவேல் மீது போலீசில் புகார்!

ரஜினி நடிப்பில் வெளியான வேட்டையன் படத்தில், “கோவில்பட்டி காந்தி நகரில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் ஆசிரியரை படம் பிடித்து, தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பியதால் சர்ச்சை” என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளபடி அந்த ஊரில் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியை சித்தரிப்பதாக கூறி, ‘அதனை நீக்க வேண்டும், இயக்குநர் ஞானவேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கோவில்பட்டி சமூக ஆர்வலர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் கண்ணா என்பவர் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 

Tags : ரஜினி நடிப்பில் வெளியான வேட்டையன்

Share via