இசை குயில் எஸ் .ஜானகி இயற்கை எய்தினார்.

by Admin / 12-07-2026 01:15:14am
 இசை குயில் எஸ் .ஜானகி இயற்கை எய்தினார்.

பிரபல பின்னணி பாடகி எஸ் .ஜானகி மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார்.. பெங்களூரில் அவரது பையனுடன் வசித்து வந்தார். ஆறு மாதத்திற்கு முன்பு ஒரே மகனை இழந்த சோகத்தில் தனிமையில் இருந்த அவர் மாரடைப்பின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் பிரிந்தது. இந்திய மொழிகளில் பெரும்பான்மையான மொழிகளில் பாடிய இசை குயில் எஸ் .ஜானகி 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்களை தம் இனிய குரலால் கட்டிப் போட்டவர். ஆந்திரா குண்டூரை பூர்வீகமாக கொண்டவர். பல்வேறு தேசிய விருதுகளை பெற்றவர். மாநில விருதுகளையும் பெற்றவர் .பத்மபூஷன் விருது அவருக்கு அளிக்கப்பட்டது. ஆனால் கால தாமதமாக தனக்கு அளிக்கப்பட்டதன் காரணமாக அதை அவர் ஏற்றுக் கொள்ள மறுத்த விட்டார். திரை திரைப்பாடல்களை பாடுவதில் இருந்து விலகி இருந்த அவர் மேடையில் பாடி வந்தார். பல மறக்க முடியாத பாடல்களுக்கு சொந்தமுடையவர்.

 

Tags :

Share via

More stories

Logo