சேலத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

by Staff / 04-05-2022 05:23:43pm
சேலத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

சேலம் மாவட்டம் சின்னக்கடை வீதியில் சோதனை நடத்திய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 1500 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்தனர். சின்ன கடை வீதி பகுதியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர் அப்போது செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட 1500 கிலோ மாம்பழங்கள் மற்றும் அதற்குப் பயன்படுத்தப்பட்ட எத்திலின் போன்ற ரசாயனங்கள் பறிமுதல் செய்த அதிகாரிகள் உரிமையாளர்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிந்துள்ளனர்.

 

Tags :

Share via