கென்யாவில் 10 சிங்கங்கள் பலி

by Staff / 15-05-2023 12:58:25pm
கென்யாவில் 10 சிங்கங்கள் பலி

கென்யாவில் ஒரேவாரத்தில் 10 சிங்கங்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தெற்கு கென்யாவில் கடந்த சனிக்கிழமை அன்று மட்டும் 6 சிங்கங்கள் கொல்லப்பட்டதாக கென்யா வனவிலங்கு சேவை கூறியுள்ளது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத ஒரு வறட்சி தற்போது கென்யாவில் ஏற்பட்டுள்ளது. இதனால் மனிதர்கள் - வன விலங்கு இடையே மோதல் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் சிங்கங்களை கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. லூங்கிட்டோ என்று அழைக்க படும் உலகின் வயதான சிங்கம் நேற்று கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via