பன்றிக்காய்ச்சல் பரவல்.. பன்றிகளை கொல்ல உத்தரவு

by Staff / 19-08-2023 04:41:17pm
 பன்றிக்காய்ச்சல் பரவல்.. பன்றிகளை கொல்ல உத்தரவு

வடக்கு கேரள மாவட்டமான கண்ணூர் அருகே உள்ள கனிச்சார் கிராமத்தில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவியதாக அதிகாரிகள் கூறினர். இதனை தொடர்ந்து 2 பண்ணைகளில் பன்றிகளை கொல்ல மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அப்பகுதியில் பன்றி இறைச்சி விநியோகம், விற்பனை மற்றும் போக்குவரத்துக்கு 3 மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் நோய் பரவாமல் தடுக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. பருவமழை காரணமாக பல்வேறு இடங்களில் சுகாதார நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

 

Tags :

Share via