சாலையில் துப்பாக்கிச் சூடு நடத்திய பயங்கரம்

by Staff / 18-03-2023 12:50:26pm
சாலையில் துப்பாக்கிச் சூடு நடத்திய பயங்கரம்

தலைநகர் டெல்லியில் பட்டப்பகலில் ஒருவர் ஆக்கிரோஷமாக கத்தி மற்றும் துப்பாக்கி நடுரோட்டில் உலா வந்து பொது மக்களை அச்சுறுத்தினார். அவர் சாலையில் சென்றவர்களை பயமுறுத்தி தரையில் துப்பாக்கியால் சுட்டதால் அங்கிருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். சாலையில் அங்குமிங்கும் ஓடி கண்ணில் பட்டவரை எல்லாம் துப்பாக்கி காட்டி மிரட்டியுள்ளார். தொடர்ந்து அங்கு விரைந்த போலீசார் குற்றவாளியை கைது செய்தனர். குற்றவாளியின் பெயர் கிரிஷன் ஷெர்வால் என்பதும், அவர் தனது மனைவியை பிரிந்து சில காலமாக தனியாக வசித்து வந்ததும் தெரியவந்துள்ளது.
 

 

Tags :

Share via