குழந்தை கடத்தல் பெண் உட்பட இருவர் கைது

by Staff / 18-03-2023 12:57:13pm
குழந்தை கடத்தல் பெண் உட்பட இருவர் கைது

மதுரை ரயில்வே நிலையத்தில் உறங்கிக் கொண்டிருந்த திண்டுக்கல்லை சேர்ந்த சையது அலி, பாத்திமா என்பவர்களது மூன்று மாத குழந்தை ஷாலினியை, போஸ் (34) மற்றும் அவரது பெண் நண்பர் கலைவாணி (33) இருவரும் சேர்ந்து கடத்திச் சென்றனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த திலகர் திடல் போலீசார் விரைந்து செயல்பட்டு 2 மணி நேரத்தில் குழந்தையை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக பெண் உட்பட இருவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via