தம்பி கட்டையால் அடித்ததில் அண்ணன் பலி

by Staff / 21-03-2023 11:23:30am
தம்பி கட்டையால் அடித்ததில் அண்ணன் பலி

ஈரோடு பெருந்துறை அடுத்த எல்லப்பாளையத்தை சேர்ந்தவர் சண்முகம். இவரின் அண்ணன் ராமசாமி. இவர்களுக்கிடையே பொதுத்தடத்தில் கழிவறை கழிவு நீர் செல்வது தொடர்பாக தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் ராமசாமியை கட்டையால் சண்முகம் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அவர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவசர மருத்துவ பிரிவில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக பெருந்துறை போலீசார் முன்னதாக கைது செய்யப்பட்ட சண்முகத்தை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அதே சமயம் அவர் மீதான வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

 

Tags :

Share via