தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

by Staff / 22-03-2023 02:17:42pm
தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

ராஜாக்கமங்கலம் அருகே சிவசெல்வபுரத்தைச் சேர்ந்தவர் வீரன் (வயது 38), கட்டிட தொழிலாளி. இவருக்கும் மனைவி நந்தினிக்கும் இடையே அடிக்கடி தகராறு நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் வீரனின் சகோதரி மகள் திருமண அழைப்பிதழில் வீரனின் பெயர் இடம் பெறவில்லை.இது தொடர்பாக வீரனுக்கும் அவரது மனைவி நந்தினிக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்த வீரன், தாராவிளை பகுதியில் தென்னந்தோப்பில் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் ராஜாக்க மங்கலம் போலீசார் வீரனின் உடலை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைத்தனர்.ஈச்சம்பவம் குறித்து வீரனின் மனைவி நந்தினி கொடுத்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via