கணவரை கொடூரமாக கொலை செய்த மனைவி தலைமறைவு.

by Staff / 26-03-2023 04:08:40pm
கணவரை கொடூரமாக கொலை செய்த மனைவி தலைமறைவு.

மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன் குளத்தை சேர்ந்த சர்க்கரை( 51) திருநகர் அ. ம. மு. க. பகுதி செயலாளராக இருந்தார். மேலும் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவரது மனைவி அன்னலட்சுமி (48). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சர்க்கரைக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்றிரவு மீண்டும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. சக்கரை குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது.இந்நிலையில் சர்க்கரை வீட்டிற்கு வெளியே இருந்த கயிற்று கட்டிலில் படுத்து தூங்கிய உள்ளார். அவரது 2 மகன்கள் மற்றும் மனைவி அன்னலட்சுமி வீட்டுக்குள் படுத்திருந்தனர். நள்ளிரவில் எழுந்த அன்னலட்சுமி, வீட்டுக்கு வெளியே கட்டிலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த கணவரின் தலையில் பெரிய கல்லை எடுத்து வந்து போட்டுவிட்டு ஏற்கனவே தயாராக வைத்திருந்த சுடு தண்ணீரை கணவரின் உடல் முழுவதும் ஊற்றியும் அதன்பின்பும் ஆத்திரம் தீராத அன்னலட்சுமி, சர்க்கரையை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். மனைவியின் அடுத்தடுத்த கொடூர தாக்குதலால் வலி தாங்க முடியாமல் அலற தந்தையின் அலறல் சத்தத்தை கேட்டு வீட்டுக்குள் படுத்து தூங்கிய மகன்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரும் வந்தனர். அப்போது வீட்டுக்கு வெளியே சர்க்கரை ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடியபடி கிடந்துள்ளார். அதிர்ச்சியடைந்த அவர்கள், சர்க்கரையை அங்கிருந்து மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றதில் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.இதற்கிடையே வீட்டில் இருந்த அன்னலட்சுமி தலைமறைவாகி விட்டார். சர்க்கரை கொலை குறித்து திருநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து சர்க்கரையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

 

Tags :

Share via