அழுகியநிலையில் பெண் சடலம்...

by Staff / 29-03-2023 04:55:02pm
அழுகியநிலையில் பெண் சடலம்...

தஞ்சாவூர்: பாபநாசம் அருகில் உள்ள பண்டாரவாடை கரைமேட்டு தெருவைச் சேர்ந்தவர் செல்வமணி(வயது 55). இவருக்கு மூன்று மகள்கள், மகன்கள் உள்ளனர். இவரது கணவர் சீனிவாசன் இறந்துவிட்ட நிலையில் செல்வமணி தனியாக வசித்துவந்தார். கடந்த 5 நாட்களாக செல்வமணி மாயமான நிலையில், அவரது உறவினர்கள் அவரைத் தேடிவந்தனர். இந்நிலையில், பூட்டப்பட்ட அவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. உள்ளே சென்று பார்த்தபோது செல்வமணி, அழுகியநிலையில் அண்டா ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டார். தகவலறிந்து வந்த தஞ்சை மாவட்ட எஸ்.பி., உள்ளிட்ட போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர்.

 

Tags :

Share via