மகனின் சடலத்தை தூக்கிச் சென்ற தந்தை
உத்தரபிரதேசத்தில் நெஞ்சை உருக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஆம்புலன்ஸ் இல்லாத நிலையில், ஒருவர் தனது மகனின் சடலத்தை கையில் ஏந்திச் சென்றார். உன்னாவ் மாவட்டம் சித்ரகூட் என்ற இடத்தில் நடந்த சாலை விபத்தில் சுபம் என்ற ஏழு வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். சிறுவனின் உடல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இறந்த உடலை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால், சிறுவனின் தந்தை மகனின் சடலத்தை கையில் ஏந்தி வீட்டுக்கு கொண்டு சென்றார். இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags :