மின்வாரிய ஊழியர் விஷம் குடித்து தற்கொலை

by Staff / 02-04-2023 03:04:35pm
மின்வாரிய ஊழியர் விஷம் குடித்து தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகில் உள்ள அறிவான்மொழி கிராமத்தைச் சேர்ந்தவர் தவசி பெருமாள் மகன் பாலசுந்தரம் (56). இவர் பழனியப்பபுரம் மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் இவரை கோவில்பட்டி நாலாட்டின்புதூர் மின்வாரிய அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டாராம்.இதனால் மனம் வேதனை அடைந்த பாலசுந்தரம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தட்டார்மடம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பவுலோஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

 

Tags :

Share via