பழ வியாபாரிக்கு அரிவாள் வெட்டு

by Staff / 02-04-2023 04:13:29pm
 பழ வியாபாரிக்கு அரிவாள் வெட்டு

தூத்துக்குடியில் பழம் வியாபாரியை அரிவாளால் வெட்டிய ஆட்டோ டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.  
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி கால்டுவெல் காலனியை சேர்ந்தவர் ஜெப ஸ்டீபன் (38). இவர் 2-ம் கேட் பகுதியில் பழக்கடை நடத்தி வருகிறார். இவருடன் அவரது உறவினரான கன்னிமுத்து (59) என்பவரும் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவரது கடைக்கு கிருஷ்ண ராஜபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவரான சுந்தரபாண்டி என்பவர் பழம் வாங்கி சென்றார்.  பின்னர் திரும்பி வந்து வாங்கி பழங்கள் சரியில்லை என கூறியுள்ளார். அப்போது ஜெப ஸ்டீபனுக்கும், சுந்தரபாண்டிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சுந்தரபாண்டி அரிவாளால் வெட்ட முயன்றார். இதனைப்பார்த்த கன்னிமுத்து அதனை தடுக்க முயன்றார். அப்போது அவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் மத்தியபாகம் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் கொலை முயற்சி வழக்குப்பதிவு வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். தலைமறைவான சந்தரபாண்டியை போலீசார் தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via