திருடனுடன் பெட்ரோல் திருடிய போலீஸ்

by Staff / 12-04-2023 11:36:53am
திருடனுடன் பெட்ரோல் திருடிய போலீஸ்

குற்றங்களை தடுத்து திருடர்களை பிடிப்பதே காவல்துறையின் கடமை. ஆனால் தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் நகரில் போலீஸ்காரர் ஒருவர் திருடனின் அவதாரம் எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருடனுடன் சேர்ந்து, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கில் பெட்ரோல் திருடியுள்ளார். இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடந்துள்ளது. ஒரு நபர் பைக்கில் இருந்து பெட்ரோல் திருடும்போது போலீஸ் கான்ஸ்டபிள் பாதுகாப்புக்கு நின்றார். இந்த காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.

 

Tags :

Share via