வகுப்பறையில் கருக்கலைப்பு... இளம்பெண் பலி

by Staff / 15-04-2023 12:05:48pm
வகுப்பறையில் கருக்கலைப்பு... இளம்பெண் பலி

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. வகுப்பறையில் கருக்கலைப்பு செய்ததன் காரணமாக பிடெக் படித்து வந்த 19 வயது இளம்பெண் உயிரிழந்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் கடும் ரத்தப்போக்கு காரணமாக கடந்த 11ம் தேதி வகுப்பறையில் கீழே விழுந்திருக்கிறார். அப்போது அவர் அருகில் ஆறு மாதக் கருவும் இருந்துள்ளது. அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது இளம்பெண் உயிரிழந்துள்ளார். ஆனால் வகுப்பறையில் கருக்கலைப்பு நடந்ததா அல்லது அந்தப் பெண்ணே கருக்கலைப்பு செய்தாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

 

Tags :

Share via