இளம் பெண் தூக்கு போட்டு தற்கொலை
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகே உள்ள உடுப்பத்தான் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயன் பெயிண்டர் இவருடைய மனைவி நிவேதா கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு கோகுல் என்ற மகன் உள்ளனர். இந்த நிலையில் விஜியனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கிடையே தகராறு வந்ததாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து நேற்று முன் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது இதனுடைய விஜியன் வெளியில் சென்று விட்டார். அப்போது வீட்டில் தனியாக இருந்த நிவேதா சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறியும் சம்பவ இடத்திற்கு சென்ற வெண்ணந்தூர் போலீசார் நிவேதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சேலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வெண்ணந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணம் ஆகி 5 ஆண்டுகளுக்குள் நிவேதா இறந்ததால் இது தொடர்பாக நாமக்கல் உதவி கலெக்டர் பிரபாகரன் விசாரணை நடத்தி வருகின்றார்.
Tags :