கடன் தொல்லையால் மீனவர் தற்கொலை.

by Staff / 20-04-2023 02:29:37pm
கடன் தொல்லையால் மீனவர் தற்கொலை.

புதுக்கடை அருகே உள்ள இனயம் புத்தன்துறை பகுதி பாரதி தெருவை சேர்ந்தவர் ஆண்டனி (வயது59), மீனவர். இவரது மனைவி உஷா, அந்த பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். இவரிடம் அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் சீட்டு பணம் முதலீடு செய்துள்ளனர். ஆனால் கடந்த சில மாதங்களாக சீட்டு தொழிலில் உஷாவுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது. சுமார் ரூ. 1½ கோடி நஷ்டம் ஏற்பட்டதால் அவரால் பலருக்கு பணம் கொடுக்க முடியவில்லை. இதனால் பணம் கேட்டு பலரும் வீட்டிற்கு சென்று தகராறு செய்தனர். இதனால் உஷா தலைமறைவாகி வேறு வீட்டில் வசித்து வந்துள்ளார். இது போன்ற சம்பவங்களால் மனமுடைந்த அவரது கணவர் ஆண்டனி, வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்தார். இதுதொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ஆண்டனி உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via