ஆட்சித்தலைவரை ஆங்கிலக்கேள்விகளால் துளைத்தெடுத்த வாலிபர்..ஆடிப்போன அதிகாரிகள்.

by Editor / 22-09-2023 11:49:43pm
ஆட்சித்தலைவரை ஆங்கிலக்கேள்விகளால் துளைத்தெடுத்த வாலிபர்..ஆடிப்போன அதிகாரிகள்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட  ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் .பி.என்.ஸ்ரீதர்,ஆங்கிலத்தில் பேசியதால் அதிர்ச்சியடைந்த பலர் பதிலளிக்கமுடியாமல் வேடிக்கைபார்த்த நிலையில் அப்போது யாரும் எதிர்பாராத விதமாக ஒரு வாலிபர் ஆட்சியரிடம் ஆங்கிலத்தில் சரிமாரியாக கேள்விகளை கேட்கத்தொடங்கினார்.மீனவ இளைஞர்  பேசும்போது அரசின் பணம் வீணாவது உங்களுக்கு  கவலை இல்லையா..? என கேள்விகளால் ஆட்சியரை துளைத்தெடுத்த இளைஞரின் கேள்விக்கணைகளால் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கத்தில் கூடியிருந்த அதிகாரிகள் மீனவர்களை கேவலமாக பார்க்கின்றனர்.பதில் கூற வேண்டிய அதிகாரிகள் நீதிமன்றத்தை நாடுங்கள் என அலட்சியமாக பதிலை மாவட்ட ஆட்சியரின் முன்னிலையில் அளிக்கின்றனர்  என ஆவேசமாக பேசிய அந்த வாலிபர் பல்வேறு குறைகளை ஆட்சியர் முன்பு கொட்டியதால் அதிர்ச்சி உருவானது.ஆட்சித்தலைவரை ஆங்கிலக்கேள்விகளால் துளைத்தெடுத்த அந்தவாலிபரை கண்டு அதிகாரிகள் கொஞ்சம் ஒதுங்கியபடியே நின்றுகொண்டனர்.நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மீனவர் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடமும் அதிகாரிகளிடமும்  மீனவ பிரதிநிதிகள் நடத்திய வாக்குவாதம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

 

Tags : கன்னியாகுமரி மாவட்ட

Share via