மத்திய அரசின் வெடிமருந்து தொழிற்சாலையில் விபத்து

by Staff / 19-11-2022 04:33:35pm
மத்திய அரசின் வெடிமருந்து தொழிற்சாலையில் விபத்து

நீலகிரி குன்னூர் அருவங்காடு பகுதியில் அமைந்துள்ளது மத்திய அரசுக்கு சொந்தமான வெடிமருந்து தொழிற்சாலை. இந்த வெடிமருந்து தொழிற்சாலையில் இன்று காலை 8 மணி அளவில் 8 பேர் வேதி பொருட்களை கலக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது அந்த இயந்திரம் திடீரென வெடித்தது. இதில் 2 பேர் லேசான காயம் அடைந்தனர். மேலும் பலத்த வெடி சத்தத்தால் 3 பேரின் காது பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் ஊட்டி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
 

 

Tags :

Share via