சுற்றுலா பயணிகளை ஓட ஓட விரட்டும் பறவை எறும்பு

by Staff / 04-04-2023 11:49:14am
சுற்றுலா பயணிகளை  ஓட ஓட விரட்டும் பறவை எறும்பு

வால்பாறை அருகே கருமலை எஸ்டேட் வழியாக பொள்ளாச்சிக்கு அரசு பேருந்து மற்றும் சுற்றுலா பயணிகள் செல்லும் வாகனங்கள் சென்று வருகின்றன. கருமலை அன்னை வேளாங்கண்ணி கோவில், ஸ்ரீ பாலாஜி கோவில் செல்லும் சுற்றுலா பயணிகளை அந்த சாலையோரம் இருக்கும் மரத்தில் உள்ள பறவை எறும்பு தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இவை மிகுந்த நச்சுத்தன்மை வாய்ந்தது. அதை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வனத்துறை அதிகாரிகளுக்கு வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளார்கள். சுற்றுலா பயணிகளை பறவை எறும்புகள் தாக்கி வருவதினால் உயிர் சேதம் ஏற்படும் சூழல் உள்ளது.

 

Tags :

Share via