காதலியை தனிமையில் அழைத்து நகை, பணம் பறிப்பு: மூவர் போக்சோவில் கைது

by Staff / 11-01-2023 02:19:34pm
காதலியை தனிமையில் அழைத்து  நகை, பணம் பறிப்பு: மூவர் போக்சோவில் கைது

மதுரை அருகே காதலனுடன் தனிமையில் இருந்த சிறுமியை படமெடுத்து மிரட்டி நகை பணத்தை பறித்த சம்பவத்தில் அவரது காதலர் உட்பட மூவரை போக்சோ சட்டத்தின் செவ்வாய்க்கிழமை போலீசார் கைது செய்தனர்.மதுரை புதுரை சேர்ந்த 17 வயது சிறுமி மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள மங்கலம்பட்டி வெள்ளலூர் தெருவைச் சேர்ந்த நாகராஜன் மகன் சிவராமன் 21 என்பவரை காதலித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவராமனும் அந்த சிறுமியும் மேலூர் அருகே உள்ள கீழவளவு மலைப்பகுதியில் தனிமையில் இருந்தனர்.

அப்போது மேலவளவு வி. எஸ். நகரைச் சேர்ந்த சிவலிங்கம் மகன் விஜயகுமார் மதுரை உத்தங்குடி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த பரசுராமன் மகன் வினோத்குமார் இவர்கள் சிறுமி தனிமையில் இருப்பதை கைபேசியில் படம் பிடித்து மிரட்டினர். மேலும் சிறுமி அடைந்திருந்த நகை ரூ. 30, 000 பறித்து சென்றனர்.

மேலும் அந்த சிறுமியிடம் அடிக்கடி பணம் கேட்டு மிரட்டியதால் இது தொடர்பாக அவர் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினரிடம் தெரிவித்தார் இதை அடுத்து அந்த அமைப்பினர் விசாரித்து சம்பவம் குறித்து காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். காவல் ஆணையர் உத்தரவின் பேரில் கோ புதூர் போலீசார் சிறுமியின் காதலர் சிவராமணி விசாரணை நடத்தினர் இது பணம் பறிப்பு சம்பவத்தில் அவருக்கும் தொடர்பு இருப்பதும் விஜயகுமார் வினோத்குமார் ஆகியோர் சிவராமனின் நண்பர்கள் என்றும் தெரிந்தது இதை அடுத்து போலீசார் இந்த மூவரையும் தகவல் தொடர்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

 

Tags :

Share via