வைகாசி மாத பௌர்ணமியன்று கிரிவலம்  உண்டியல் காணிக்கை ரூ.3 கோடி ரொக்கம், 360 கிராம் தங்கம், 2092 கிராம் வெள்ளி  பக்தர்கள் நேர்த்திக்கடன்.

by Editor / 03-06-2024 11:08:23pm
வைகாசி மாத பௌர்ணமியன்று கிரிவலம்  உண்டியல் காணிக்கை ரூ.3 கோடி ரொக்கம், 360 கிராம் தங்கம், 2092 கிராம் வெள்ளி  பக்தர்கள் நேர்த்திக்கடன்.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார்  திருக்கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் வைகாசி மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி இன்று காலையில் தொடங்கி மாலை வரை நடைபெற்றது. வைகாசி மாத பௌர்ணமி தினத்தன்று பல்வேறு மாவட்டம், மாநிலங்களில் இருந்து அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தும், 14 கிலோ மீட்டர் தூரம் கிரிவலம் நடந்து சென்றும் தரிசனம் செய்து சென்றார். 

அண்ணாமலையார்  கோவிலுக்கு வந்த பக்தர்கள் நேர்த்திகடனாக உண்டியலில் ரூ.3 கோடி ரொக்க பணமும், 360 கிராம் தங்கமும், 2092 கிராம் வெள்ளியும் பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் செலுத்தியுள்ளனர்.

அண்ணாமலையார்  திருக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி முடிந்து உண்டியல் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி திருக்கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் இன்று உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. இதில் கோவில் ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என சுமார் 200 பேர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

அண்ணாமலையார் திருக்கோயிலிக்கு பௌர்ணமியன்று வெளி நாடுகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை புரிவார்கள். பக்தர்கள் நினைத்த காரியம் நிறைவேற அண்ணாமலையாரை வேண்டி நேர்த்தி கடனாக காணிக்கை செலுத்துகின்றனர். அதுமட்டுமல்லாமல் தங்கம் வெள்ளி போன்றவற்றை உண்டியலில் காணிக்கையாக செலுத்துகிறார்கள். அந்த வகையில் கடந்த மாதம் 22ம் தேதி நடைபெற்ற வைகாசி மாத பௌர்ணமி மற்றும் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி இன்று காலை தொடங்கி மாலை நிறைவு பெற்றது. இதில் ரூ.3 கோடி பணமும், 360 கிராம் தங்கமும், 2092 கிராம் வெள்ளியும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

 

Tags :

Share via