கத்தியை காட்டி பணம் பறிப்பு

by Staff / 19-11-2022 04:36:09pm
கத்தியை காட்டி பணம் பறிப்பு

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள பூசனூர் கிராமத்தைச் சேர்ந்த செல்லத்துரை மகன் ஐயப்ப சாமி வயது 42 இவர் எட்டயபுரம் அருகே உள்ள முத்தலாபுரம் கிராமத்தில் டாஸ்மார்க் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார் விற்பனையாளராக தூத்துக்குடி அருகே உள்ள காட்டுநாயக்கன்பட்டியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் கருப்பசாமி வயது 44 ஆகிய இருவரும் நேற்று இரவு டாஸ்மாக்கில் விற்பனை செய்து வந்தனர்.இந்நிலையில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க இரண்டு நபர்கள் மது வாங்க வருவது போல் வந்து கடையை பூட்டும் நேரத்தில் கத்தியை காட்டி விற்பனை செய்த ரூபாய் 1, 50470 பறிமுதல் செய்து ஐயப்ப சாமி மற்றும் கருப்பசாமியிடம் இருந்த செல்போனையும் பறிமுதல் செய்தனர் கண்ணிமைக்கும் நேரத்தில் இருவரும் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் சென்றனர் மேலும் இதுகுறித்து ஐயப்ப சாமி எட்டயபுரம் போலீசில் புகார் செய்தார் எட்டயபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்தில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி மேற்கொண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர்

 

Tags :

Share via