திடீரென தீப்பற்றி எரிந்த வாகனம்

by Staff / 19-11-2022 04:38:49pm
திடீரென தீப்பற்றி எரிந்த வாகனம்

கோவை மாவட்டம் உப்பிலிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 22 வயதான ஜோஸ்வா, இவர் ஏடிஎம் பீல்ட் ஆபீஸராக பணியாற்றி வருகின்றார், இவர் தனது ஹோண்டா சிட்டி காரை எடுத்துக்கொண்டு அவிநாசி சாலை, ஹோப் காலேஜ், பகுதியில் கடந்த 17 ஆம் தேதி, சென்று கொண்டிருந்தார், அப்போது இவரது கார் திடீரென தீப்பற்றி எரிந்தது, இது குறித்து உடனடியாக தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர், அன்று தீயை அனைத்து பெரிய சேதத்தை தடுத்தனர், இதுகுறித்து பீளமேடு காவல் நிலையத்தில் ஜோஸ்வா புகார் அளித்தார், புகாரின் அடிப்படையில் நேற்று வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீ விபத்து நடைபெற்ற சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via