3 மாதங்களில் 3 சிறுவர்களை பலிவாங்கிய அமீபா..

by Staff / 05-07-2024 11:45:26am
3 மாதங்களில் 3 சிறுவர்களை பலிவாங்கிய அமீபா..

கேரளாவில் அமீபா தொற்றுக்கு ஆளாகி 3 மாதங்களில் 3 சிறுவர்கள் பலியாகியுள்ளனர். மலப்புரத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமி மே 21 அன்றும், கண்ணணூரைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஜூன் 25ம் தேதி அன்றும் இறந்தனர். தொடர்ந்து இரு தினங்களுக்கு முன்பு கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த மிருதுல்(14) அமீபா தொற்றால் இறந்துள்ளார். அசுத்தமான குளம், குட்டையில் குளிக்கும் போது அங்கு வாழும் ஒட்டுண்ணியான அமீபா மூக்கு வழியாக உடலுக்குள் சென்று, மூளையை தின்று உயிரிழப்பை ஏற்படுத்துகிறது.

 

Tags :

Share via