ஐபிஎல் கிரிக்கெட் கோப்பையுடன் தி.நகர் திருப்பதி கோவிலில் என்.சீனிவாசன் வழிபாடு

by Editor / 19-10-2021 03:13:49pm
ஐபிஎல் கிரிக்கெட் கோப்பையுடன் தி.நகர் திருப்பதி கோவிலில் என்.சீனிவாசன் வழிபாடு

‘‘தோனி இல்லாமல் சிஎஸ்கே இல்லை. சிஎஸ்கே இல்லாமல் தோனி இல்லை’’ என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளராக இருக்கும் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவரும், நிர்வாக இயக்குநருமான என்.ஸ்ரீனிவாசன் பெருமிதத்தோடு கூறினார்.


சென்னை அணியில் தோனி நீடிப்பது குறித்து ஊகங்கள் வலம் வரும் நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஐபிஎல் போட்டியில் சென்னை அணி 4-வது முறையாக வென்ற கோப்பை, சென்னை தியாகராய நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான கோயிலில் வைத்து ஆசீர்வாதம் பெறப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்ரீனிவாசன் பேசுகையில், ‘‘சிஎஸ்கே, சென்னை, தமிழ்நாடு ஆகியவற்றின் அங்கமாக இருப்பவர் தோனி.

அவர் இல்லாமல் சிஎஸ்கே இல்லை. சிஎஸ்கே இல்லாமல் அவர் இல்லை. உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் சிஎஸ்கேவின் வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சியில் தோனி முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் வெற்றிக் கோப்பையை மரியாதை நிமித்தமாக பகிர்ந்து கொள்வார்’’ என்றார்.
டிஎன்பிஎல் போட்டியின் மூலமாக ஐபிஎல் மற்றும் இந்திய அணிக்காக தமிழகத்திலிருந்து 13 வீரர்கள் கிடைத்துள்ளனர். டிஎன்பிஎல் போட்டி படிப்படியாக வளர்ந்து வருகிறது என்றார்.


இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவரும், இந்தியா சிமென்ட்ஸ் இயக்குநருமான ரூபா குருநாத், சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட்ட்டின் தலைமை நிர்வாக அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.திருமலை திருப்பதி தேவஸ்தான தமிழக ஆலோசனை குழு தலைவர் ஏ.ஜெ.சேகர் ரெட்டி உடனிருந்தார்.

 

Tags :

Share via